உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானல் ரோட்டில்காட்டு யானை

கொடைக்கானல் ரோட்டில்காட்டு யானை

பண்ணைக்காடு: கொடைக்கானல் மெயின் ரோட்டில் காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.கடந்த சில தினங்களாக தடியன்குடிசைப் பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகள் பண்ணைக்காடு எதிரொலிபாறை வனப்பகுதியில் முகாமிட்டது. தொடர்ந்து அங்கிருந்து இடம்பெயர்ந்த யானைகள் வாழைகிரி பகுதி வழியாக கொடைக்கானல் மெயின் ரோட்டிற்கு வந்தது. பெரும்பள்ளம் வனத்துறையினர் காட்டு யானைகளை மீண்டும் எதிரொலிப்பாறை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக ரேஞ்சர் குமரேசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ