உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி

மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே செங்குறிச்சி ஊராட்சி குரும்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சுவாமி சாட்டுதலுடன் ஏப்.23 ல் தொடங்கிய திருவிழாவில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் ,அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மே 1 அதிகாலை அம்மன் வானவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலத்துடன் பவனி வர கோயில் வந்தடைந்தது. இதன்பின் பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் , கிடாய் வெட்டுதல் என நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மதியம் அன்னதானம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாறுவேடத்துடன் மஞ்சள் நீராடுதலும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை