உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் குவிந்த பயணிகள் மழையிலும் படகு சவாரி

கொடையில் குவிந்த பயணிகள் மழையிலும் படகு சவாரி

கொடைக்கானல்:கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள் மழையிலும் படகு சவாரி செய்தனர்.கொடைக்கானலில் ஒரு வாரமாக கனமழை பெய்கிறது. இதுவரை 16 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இந்நிலையில் சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்துள்ளனர்.பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர் ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச் சுற்றுலாத்தலங்கள், மன்னவனுார் சூழல் சுற்றுலா மையத்தை ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.இங்கு நேற்று காலை முதலே மிதமான மழை பெய்து வந்த நிலையில் நகரை பனி மூட்டம் சூழ்ந்தது.மழையை பொருட்படுத்தாமல் ஏரியில் படகு சவாரி செய்தனர். காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.இதமான சீதோஷ்ண நிலையையும் பயணிகள் ரசித்தனர். நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி