மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
11-Feb-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலையில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம் , காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - விஐபி நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி, நரசிம்மர் கோயிலில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்ய அஷ்டோத்திர பூஜையுடன் மகா தீபாராதனை நடந்தது.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.கோவில்பட்டி: கைலாசநாதர் கோயிலில் 16 வகை அபிஷேகம், தீபாராதனை,சுவாமி புறப்பாடு நடந்தது. குட்டூர் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் மூலவர் , நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.வடமதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி ஆதிசிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், விபூதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.
11-Feb-2025