உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு பள்ளி மாணவர்களுக்கு பணி ஓய்வு ஊழியர்கள் உதவி

அரசு பள்ளி மாணவர்களுக்கு பணி ஓய்வு ஊழியர்கள் உதவி

வடமதுரை : அய்யலுார் மணியகாரன்பட்டியை சேர்ந்த அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் வி.பாலசுப்பிரமணி, எஸ்.கல்யாணசுந்தரம், சி.பொம்மிநாயக்கர். இவர்கள் மூவரும் பணி ஓய்வு பெறும் முன்பாகவே பல ஆண்டுகளாக சொந்த கிராமப் பகுதியை சேர்ந்த கோடாங்கிசின்னான்பட்டி, மணியகாரன்பட்டி அரசு பள்ளிக்கும், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது இப்பள்ளிகள் நடப்பு கல்வியாண்டிற்காக திறக்கப்பட்டதுமே நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக், எழுது பொருட்களை வழங்கினர். தற்போது இவர்களுடன் பாலசுப்பிரமணியின் பெங்களூர் நண்பர் ஜி.கண்ணனும் இந்த நற்பணியில் இணைந்துள்ளார். மணியகாரன்பட்டி பள்ளியில் நடந்த விழாவில் தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியை ஈஸ்வரி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை