உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், : அரசாணை 243யை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். டி.என்.பி.டி.எப்., - நிர்வாகி பிரசாந்த் முன்னிலை வகித்தார். 50 க்கு மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்றும் ஆர்ப்பாட்டம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்