உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்புகளால் குறுகும் தெருக்கள்; அவசர நேரங்களில் திணறும் பரிதாபம்

ஆக்கிரமிப்புகளால் குறுகும் தெருக்கள்; அவசர நேரங்களில் திணறும் பரிதாபம்

பொதுவாக ரோட்டோரங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் பல இடங்களில் ரோடு விளம்பு வரையிலும், சில இடங்களில் ரோடு விளம்பை தாண்டி தார் ரோட்டிற்கு இடையூறு செய்யும் வகையில் கூரைகளை அமைத்திருப்பதை பார்க்கலாம். இதில் அரசு துறை அதிகாரிகளின் கண்காணிப்பு , கண்டிப்பான நடவடிக்கை இல்லாததால் இதுபோன்ற அவல நிலை நீடிக்கிறது.பல இடங்களில் சிக்கல் அதிகமான பின்னர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. சில மாதங்களில் படிப்படியாக பழைய ஆக்கிரமிப்பு நிலைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் வந்துவிடுகின்றனர். அடுத்து பல ஆண்டுகள் பின் நடக்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி வரை இவர்களது ஆக்கிரமிப்பிற்கு ஆயுள் கெட்டியாகவே இருக்கும்.இது ஒருபுறமிருக்க குடியிருப்புகள் இருக்கும் தெருக்களில் வீடுகள் கட்டும் பலரும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறிது உயரமாகவே கட்டுகின்றனர். தங்களது இடத்திற்குள் வீடுகளை அமைக்கும் இவர்கள் பொதுப்பாதையை ஆக்கிரமித்து திண்ணை, வாகனங்களை ஏற்ற, இறங்க சாய்வுத்தளம் அமைக்கின்றனர். இதனால் தெருக்களின் பொதுப்பாதை அகலம் குறைகிறது. சில தெருக்களில் அவசரத்திற்கு கார், ஆட்டோ, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை