எரியாத உயர் கோபுர விளக்குகள்; இருள் சூழும் சந்திப்புகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை எரியாமல் உள்ளன.இரவில் இப்பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது . வாகனஓட்டிகள் மட்டுமல்லாது பாதசாரிகளும் பாதிப்பினை சந்திக்கின்றனர். புகார்கள் சென்றாலும் உள்ளாட்சிகள் கண்டுக்காது அலட்சியம் காட்டுகிறது .இனியாவது இதனை சீரமைக்க முன் வர வேண்டும்.