கறிக்கடைகாரரை வெட்டிய 6 பேர் கைது
வேடசந்துார்: வேடசந்துார் ஐயப்பா நகரை சேர்ந்தவர் ஜீவா 30. குடகனாறு ஓரப்பகுதியில் பன்றிகளை வளர்த்து வரும் இவர் பன்றி கறிக்கடையும் நடத்தி வருகிறார். மாரம்பாடியில் கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக்கொம்பை சேர்ந்த முனிஸ்வரன் 31, க்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த முனீஸ்வரன் சிலருடன் சேர்ந்து ஜீவாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். வேடசந்துார் போலீசார் முனீஸ்வரன், ஈஸ்வரன் 43, பாஸ்கரன் 25, மோகனமூர்த்தி 21, ஆனந்த் 24, பிரகாஷ் 26, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.