உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 2 மடங்கு விலை உயர்ந்த பீட்ரூட்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 2 மடங்கு விலை உயர்ந்த பீட்ரூட்

ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பீட்ரூட் விலை இரு மடங்காக உயர்ந்து கிலோ ரூ.15க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி, கொல்லபட்டி, பாவாயூர், கேதையுறும்பு, முத்துநாயக்கன்பட்டி, சாலைப் புதுார் சுற்றிய பகுதிகளில் பீட்ரூட் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன்பு வரை பல இடங்களில் அறுவடை தொடர்ந்ததால் ஒரு கிலோ பீட்ரூட் ரூ.7க்கு விற்பனையானது. மூன்று நாட்களாக அறுவடை குறைந்த நிலையில் மார்க்கெட்டிற்கு பீட்ரூட் வரத்து குறைந்த போதிலும் வியாபாரிகள் கொள்முதல் அளவை குறைக்கவில்லை.இதனால் பீட்ரூட் விலை அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரு கிலோ பீட்ரூட் விலை இருமடங்காகி ரூ.15க்கு விற்றது. தொடர் மழை காரணமாக பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ