மின்னொளியில் கொடை பிரையன்ட் பூங்கா
கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா இரவில் மின்னொளியில் ஜொலிப்பதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62 வது மலர் கண்காட்சிக்காக சில மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் பூத்துக் குலுங்குகின்றன.இன்னும் இரு வாரங்களில் மலர் கண்காட்சி நடக்க உள்ள நிலையில் இங்குள்ள மரங்கள் மற்றும் பந்தல் அமைப்பு உள்ள பகுதிகளில் பல வண்ணங்களில் ஒளிரும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமாக மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும் பூங்காவில் ஒளிரும் மின்விளக்குகளுக்கிடையே பூங்காவை கண்டு ரசிக்க பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.