தடுப்பில் மோதிய கார்
நத்தம்; திருச்சி பொன்மலையை சேர்ந்தவர் அர்ஜூன் 38. நேற்று முன்தினம் தனது காரில் மதுரைக்கு துவரங்குறிச்சி நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். நத்தம் அருகே குட்டுப்பட்டி புதுார் பகுதியில் வந்த போது சாலையோர தடுப்பில் மோதியது. இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. அர்ஜூனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.