உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டுமாடு தாக்கி தம்பதியினர் காயம்

காட்டுமாடு தாக்கி தம்பதியினர் காயம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் காட்டுமாடு தாக்கி தம்பதியினர் காயமடைந்தனர். கொடைக்கானல் அப்சர்வேட்டரியை சேர்ந்தவர் விக்னேஷ் 30, இவரது மனைவி விஜயலட்சுமி 28. இருவரும் நேற்று முன்தினம் மாலை டூ வீலரில் கலையரங்கம் அருகே வந்தபோது அவ்வழியே வந்த காட்டுமாடு தாக்கியதில் இருவரும் விழுந்தனர். 7 மாத கர்ப்பிணியான விஜயலட்சுமி, கணவர் விக்னேஷ் லேசான காயத்துடன் தப்பினர். கொடைக்கானல் வனத்துறையினர் காட்டுமாடை விரட்டி, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். நகர் பகுதியில் காட்டுமாடு அச்சுறுத்தலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை