வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஐயா நீங்கள் ஏதாவது பேசி விடுவீங்க. இவங்க கழிவு நீரை எடுத்து எதிரா பேசரவங்க வீட்டுல விட்டுறுவாங்க.
நாட்டில் துாய்மை பாரதம் என மத்திய அரசு திட்டம் வகுத்து திறந்தவெளி கழிப்பிடமே இருக்க கூடாது என வீடுகளிலே கழிவறைகள் அமைக்க மானியம் வழங்குகிறது. இதுதவிர பொது சுகாதார வளாகங்களும் அதிகளவில் அமைக்கப்படுகின்றன. இப்படி துாய்மையான நாடு அமைய அரசு பல திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ரோட்டோரம், குறுக்காக பாய்ந்து செல்லும் நிலை உள்ளது. இவ்வாறு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் கழிவு நீர் செல்லும் போது அவ்விடத்தில் தார் பெயர்ந்து ரோடு சேதமாகிறது. பொதுவாக ரோடு புதுப்பித்தல் பணி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் அதுவரை அதே நிலை நீடிக்கிறது. அங்கு ஏற்படும் பள்ளம், தேங்கி நிற்கும் கழிவு நீரை கண்டு டூவீலர் போன்ற இலகு ரக வாகனங்கள் அப்பகுதியில் ஒதுங்கி செல்ல முற்படும்போது மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.அப்பகுதி சகதியாக கனரக வாகனங்களின் சக்கரங்கள் எதிர்பாராமல் மண்ணில் புதைந்து விபத்துக்களை உருவாக்குகிறது. பொது பயன்பாட்டிற்காக பல லட்ச ரூபாய்கள் செலவிட்டு அமைக்கப்படும் தார் ரோடுகளில் கழிவு நீர் பாய்வதை தடுக்க அரசு நிர்வாகம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரே நாளில் இல்லாவிடினும் கால போக்கில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
ஐயா நீங்கள் ஏதாவது பேசி விடுவீங்க. இவங்க கழிவு நீரை எடுத்து எதிரா பேசரவங்க வீட்டுல விட்டுறுவாங்க.