மழையில் வீட்டின் கூரை இடிந்து மூதாட்டி காயம்
சாணார்பட்டி: சாணார்பட்டி கம்பிளியம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகம்மாள் 65. இவரது கணவர் ரெங்கசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு பெய்த மழையில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் படித்திருந்த அழகம்மாள் காயமடைந்தார். கம்பிளியம்பட்டி வி.ஏ.ஓ., செல்வகுமார் விசாரித்தார்.