மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: கோவை
23-Jun-2025
குஜிலியம்பாறை: பாளையம் எலக்ட்ரிக்கல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமாயின.பாளையம் அரவை ரோடு பிரிவில் முத்தம்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர் 35, சொந்தமான முருகன் எலக்ட்ரிக்கல்ஸ் கடை உள்ளது. நேற்று இரவு 7:30 மணிக்கு கடை உரிமையாளர் கடையை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இரவு 8:00 மணிக்கு புகை மூட்டம் வந்ததை தொடர்ந்து சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. தீ வேகமாக எரிந்ததில் அனைத்து பொருட்களும் சேதமாயின. குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினர் இரவு 9:00 மணி வரை போராடி தீயை அணைத்தனர். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
23-Jun-2025