தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
பழநி: பழநி பஸ் ஸ்டாண்டில் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. பயணிகள் திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் காப்பாற்றும் முறைகள், தீ தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான மீட்பு வீரர்கள் பங்கேற்றனர்.