சித்திரை விழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம்
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி தினமும் அபிஷேகம் நடக்கிறது.மே8ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ,மே 12ல் மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல் நடந்தது. கோயில் திருவிழாவில் திருக்கல்யாணம், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் இறங்குதல் நடந்தது.நேற்று பூ பல்லக்கு ஊர்வலம் , புட்டுத்திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்கள், நாணயங்கள், மாதுளை, திராட்சை பழங்களை சுவாமிக்கு காணிக்கையாக சமர்ப்பித்தனர். சுந்தராஜ பெருமாள், பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.