விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாட்களால் விலை உயர்ந்த பூக்கள்; கிலோ மல்லிகை ரூ.2000க்கு விற்பனை
திண்டுக்கல்; விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்கெட்டில் பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதில் கிலோ மல்லிகை ரூ.2000 க்கு விற்பனையானது . திண்டுக்கல் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு சுற்றுப்பகுதிகளான நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு, சித்தையன்கோட்டை, மயிலாப்பூர், செங்கட்டாம்பட்டி, போடிகாமன்வாடி, செம்பட்டி, வெள்ளோடு. மைலாப்பூர், ரெட்டியார்சத்திரம், வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இங்கிருந்து வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்கின்றனர்.இன்று விநாயகர் சதுர்த்தி,அடுத்து வரும் மூகூர்த்த தினங்களை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.800 க்கு விற்கப்பட்ட மல்லிகை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதேபோல் ரூ.500 க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1000, ரூ.20 க்கு விற்ற வாடாமல்லி ரூ. 200, முல்லை ரூ.1000, ஜாதிப்பூ ரூ.800, சம்பங்கி ரூ.400, செண்டுமல்லி ரூ.120, ரோஜா ரூ.200, காக்கரட்டான் ரூ.1000, பட்டன்ரோஸ் ரூ.500 என உயர்ந்து விற்பனையானது.