தலைவர்களுக்கு மலரஞ்சலி
திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றத்தின் சார்பில் பகத்சிங், மகாத்மாகாந்தி, நடிகர் சிவாஜி பிறந்தநாள் விழா ,காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். கவுரவ ஆலோசகர் டால்டன் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைச்செயலர் மாரியப்பன், அறக்கட்டளை தலைவர் நடராஜன், சஞ்சய்குமார், காங்., மாநகர தலைவர் துரை மணிகண்டன் , நிர்வாகிகள் ஜோதிராமலிங்கம், முருகேசன், சத்யன், கண்டி- மோதிலால், தேவராஜ் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பொருளாளர் வெங்கிடு செய்திருந்தார்.