அனுமதியின்றி படப்பிடிப்பு அபராதம் விதித்த வனத்துறை
பண்ணைக்காடு : கொடைக்கானல் பெரும்பள்ளம் வனப்பகுதியான பண்ணைக்காடு மயான காளியம்மன் கோயில் காப்புகாட்டில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு செய்தவர்களை ரோந்து சென்ற வனத்துறையினர் பிடித்தனர். சென்னையை சேர்ந்த செந்தில், குரு, டேவிட் ராஜா இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா உத்தரவில் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து ரூ. 75 ஆயிரம் இணக்க கட்டணமாக வசூலித்து விடுவித்தனர்.