ஆயுதங்களுடன் சுற்றிய சிறார் உட்பட நால்வர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டி மொட்டணம்பட்டி அருகே பயங்கர ஆயுதங்களுடன் நால்வர் சுற்றி திரிவதாக தெற்கு போலீசார் தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., முனியாண்டி தலைமையிலான போலீசார் மொட்டணம் பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் 24, மேட்டுப்பட்டியை சேர்ந்த 3 சிறார்கள் உட்பட நால்வரும் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கி இருந்தனர். நால்வரையும் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.