உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

பழநி: பழநி நரசிம்மன்சந்து பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து 55. 2015 ல் புது தாராபுரம் ரோட்டில் போஸ்ட் ஆபீஸ் அருகே நடந்து சென்ற போது லாரி மோதியதில் கீழே விழுந்தார்.அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதி இறந்தார். அவரது குடும்பத்தினர் பழநி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். விசாரித்த நீதிபதி லாரி,அரசு போக்குவரத்து கழகம் ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது. லாரி உரிமையாளர் இழப்பீடு தொகையை கொடுத்த நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் கொடுக்காததால் பழநி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி மலர்விழி ,வட்டியுடன் இழப்பீட்டுத் தொகையாக ரூ.4,95,000 வழங்க உத்தரவிட்டார் . இதையும் போக்குவரத்து கழகம் வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் அதன்படி பஸ் ஸ்டாண்டில் நின்ற பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !