/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
திண்டுக்கல்: ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அரசு ஊழியர் கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமை வகித்தார். செயலர் ஜோசப் சேவியர் , பொதுச்செயலர் பேட்ரிக்ரெய்மாண்ட் பேசினர். மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.