உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சூறைக்காற்றுடன் மழை; 2000 வாழை மரங்கள் சாய்ந்தன

சூறைக்காற்றுடன் மழை; 2000 வாழை மரங்கள் சாய்ந்தன

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த மழையால் குலை தள்ளிய நிலையில் இருந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் கீழே சாய்ந்தன.ஒட்டன்சத்திரம் சுந்தரி பாளையத்தில் பல ஏக்கரில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றில் அறுவடைக்கு தயாராக வாழைக்குலைகளுடன் 4 ஆயிரம் மரங்கள் இருந்தன. ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறாவளியுடன் மழை பெய்தது. காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வாழைக்குலைகளுடன் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. விவசாயி சுரேஷ் குமார் கூறியதாவது: என் தோட்டத்தில் ரூ.3.5 லட்சம் செலவு செய்து 4 ஆயிரம் வாழை மரங்கள் நடவு செய்தேன். அவை அறுவடைக்கு தயாராக இருந்தது. சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விட்டன. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை