உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பட்டாசு கடை அமைக்க அழைப்பு

பட்டாசு கடை அமைக்க அழைப்பு

திண்டுக்கல்: கலெக்டர் பூங்கொடி அறிக்கை: தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை செய்ய மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தற்காலிக பட்டாசுக் கடை உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் இணையதளம் (https://www.tnesevai.tn.gov.in) வாயிலாக அக்.19 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு சிரமம் இல்லாத, ஆட்சேபனையற்ற பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்யவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !