கருணாநிதி நினைவு நாள்
வேடசந்துார்: தி.மு.க., முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி 7- ம் ஆண்டு நினைவு நாள், ஆத்துமேடு, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., காந்தி ராஜன் மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, பேரூர் செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் சவுடீஸ்வரி, ரவிசங்கர், ஆரோன், மருத பிள்ளை, காட்டுபாவா சேட், கவிதா முருகன், மாரிமுத்து, சாகுல் ஹமீது, ஜெயபாஸ்கர், கார்த்தி பங்கேற்றனர். வடமதுரை : நகர தி.மு.க., செயலாளர் எஸ்.கணேசன் தலைமை வகித்தார்.பேரூராட்சி தலைவர் நிருபாராணி முன்னிலை வகித்தார். துணை செயலாளர்கள் வீரமணி, அழகுமலை,அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன்,பொருளாளர் முரளிராஜன், கவுன்சிலர்கள் சசிகுமார், சுப்பிரமணி, விஜயா பங்கேற்றனர்.