நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
திண்டுக்கல்: அரண்மனைக்குளம் ரோடு பாறை மேட்டுத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக்30. திண்டுக்கல் அனுமந்திராயன் கோட்டை அணையில் குளிக்க சென்ற போது கால் தவறி தண்ணீரில் மூழ்கி இறந்தார். தீயணைப்புத்துறையினர் அவரது உடலை மீட்டு தாலுகா போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.