கோயிலில் விளக்கு பூஜை
நத்தம்: -நத்தம் அருகே குட்டூர் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்குக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்ய 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.தொடர்ந்து கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கபட்டது.