கல்லுாரியில் இலக்கிய போட்டிகள்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் முருக பக்தி இலக்கியப் போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் வாசுகி தொடங்கி வைத்தார். கல்லுாரி மாணவிகள் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இரண்டாம் நாள் நாடகம், முருகன் பாடல் மனப்பாடப் போட்டி, கவிதை போட்டி நடந்தது.