உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் மதுரை பெண் இறப்பு

கொடையில் மதுரை பெண் இறப்பு

கொடைக்கானல்:மதுரை மேல கள்ளந்திரியை சேர்ந்தவர் பால்சாமி மனைவி மகாலட்சுமி 28. திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. நேற்று முன்தினம் மோதிரம் வாங்க செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். உறவினர்களிடம் தான் திரும்ப வரமாட்டேன் எனக்கூறி உள்ளார். இந்நிலையில் மேல கள்ளந்திரியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் கொடைக்கானல் சென்ற விவரம் தெரிய வந்தது. இருவரும் இங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். மகாலட்சுமி அங்கு இறந்து கிடந்தார். அறையில் பூச்சிமருந்து வாடை வீசியது. சசிகுமாரை கைது செய்து கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ