உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மகாளய அமாவாசை வழிபாடு

மகாளய அமாவாசை வழிபாடு

திண்டுக்கல் : மாவட்டத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், நீர்நிலைகளில் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வும் நடந்தது. திண்டுக்கல் அபிராமி அம்மன், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கற்பக கணபதி, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், நேருஜி நகர் நவசக்தி விநாயகர், முத்தழகுபட்டி ஓத சுவாமி கோயில், சிறுமலை வெள்ளிமலை சிவன் கோயில், அகஸ்தியர்புரம் அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில் கோபாலசமுத்திரம் கரை உட்பட நீர்நிலையையொட்டிய பகுதிகளில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மூதாதையர்களின் பெயர்களை வரிசையாக கூறி குழுவாகவும் தனித்தனியாகவும் தர்ப்பணம் செய்தனர். அகத்திக்கீரை வாங்கி பசுமாட்டுக்கு அளித்தனர். சிலர் அன்னதானம் வழங்கினர். ஆர்.எம்.காலனி வ.உ.சி., அறக்கட்டளை சார்பில் நந்தவனத்தில் ஆயிரக்கணக்கானோர் தர்ப்பணம் செய்தனர். அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன், செயலர் சாந்தினி பழனிசாமி, செயலர் காசிநாதன் ஏற்பாடுகளை செய்தனர். அக்கரைப்பட்டி : சடையாண்டி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மலை குகைக்கோயில், அடிவார கோயில்களில், மூலவருக்கு பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், மகாதீபாராதனை நடந்தது. சின்னாளபட்டி : சதுர்முக முருகன், கன்னிவாடி சோமலிங்க சுவாமி, தோணிமலை முருகன் , கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில்ளில், அமாவாசை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. வடமதுரை : மேற்கு ரத வீதி முனியாண்டி கோயில், தென்னம்பட்டி சவடம்மன், மணியகாரன்பட்டி தாயம்மன், ச.புதுார் முனியப்ப சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பழநி: பிதுர் வழிப்பாட்டிற்காக சண்முக நதிக்கரையில் முன்னோர்களுக்கு அவரவர் குல வழக்கப்படி தர்ப்பணம் அளித்தனர். எள், பச்சரிசி கலந்த பிண்டம் தயாரித்து குடும்ப பிதுர்களை நினைத்து வழிபட்டு, ஆற்றில் கரைத்தனர். அதன்பின் அன்னதானம், வஸ்திரதானம் வழங்கினர். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கினர். வீடுகளில் பெரியோர்களின் படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனர். நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், புஷ்பம்,சந்தனம், விபூதி, தீர்த்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அருகில் உள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்திலும் அமாவாசையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள அரண்மனை சந்தனகருப்புசுவாமி கோயிலில் சுவாமிக்கு வர்ண பூமாலைகளை அணிவித்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை