உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதர் மண்டிய சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தி ஜோர்

புதர் மண்டிய சாக்கடையில் கொசுக்கள் உற்பத்தி ஜோர்

அச்சப்படுத்தும் மின் கம்பம் : நிலக்கோட்டை தாலுகா அம்மைய நாயக்கனுார் பேரூராட்சி பொம்மணம்பட்டி மெயின் தெருவில் மின் கம்பத்தின் அடியில் சிமென்ட் பூச்சுக்கள் பெய்ந்து கம்பிகள் தெரிகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். --க.ரதிஷ் பாண்டியன்,- பொம்மணம்பட்டி.சேதமான ரோட்டில் பள்ளம் : எரியோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோடு சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர். பெரும் விபத்துக்கு முன் ரோட்டை சீரமைக்க வேண்டும்.-செந்தில்குமார், எரியோடு.செயலற்ற நிலையில் கேமரா : மாரம்பாடியில் இருந்து தாடிக்கொம்பு செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயலற்ற நிலையில் உள்ளது.கேமராக்களை சரி செய்து மீண்டும் செயல்படுத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அ.சந்திரசேகர், மாரம்பாடி.தெரு நாய்கள் தொல்லை : ஒட்டன்சத்திரம் நகராட்சி காந்திநகர் பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் குழந்தைகள், பெண்கள் பயத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க -வேண்டும்.-வேலவன், ஒட்டன்சத்திரம்.கொசுக்கள் உற்பத்தி ஜோர் : திண்டுக்கல் 33வது வார்டு மேற்கு மரியானாதபுரம் நாயக்கர் தோட்ட தெருவில் சாக்கடையில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது.இதனால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இதை துார்வார வேண்டும்.-மேரி, திண்டுக்கல்.----குப்பையால் சுகாதாரக்கேடு : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் குப்பை மலைபோல் குவிந்துள்ளது .பல நாட்களாக அள்ளாமல் உள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பிளாஸ்டிக் கலந்த குப்பையால் பாதிப்பு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற வேண்டும்.-சின்னத்துரை, நாகல்நகர்.கழிவு நீருடன் தேங்கும் தண்ணீர் : திண்டுக்கல் மலைக்கோட்டை செல்லும் நுழைவுப் பகுதியில் கழிவு நீருடன் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர் . இதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.-முத்துக்குமரன், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ