வியாகுல அன்னை தேர்பவனி
திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள வியாகுல அன்னை சர்ச்சில் 334ம் ஆண்டு பாஸ்கு திருவிழாவின் தேர்பவனி நடந்தது. இதில் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, பாதிரியார் செல்வராஜ், எம்.எல்.ஏ., செந்தில்குமார், தி.மு.க., மாநகர் செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, முன்னாள் மேயர் மருதராஜ், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், மாநகர் பொருளாளர் சரவணன், மண்டல தலைவர்கள் பிலால் உசேன், ஜான் பீட்டர் உள்பட பலர் பங்கேற்றனர்.