உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் ந.அய்யாபட்டி குளம்

கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பில் ந.அய்யாபட்டி குளம்

நத்தம்: நத்தம் அருகே ந.அய்யாபட்டி குளம் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பால் காடு போல் காட்சியளிக்க நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இவற்றை அகற்ற வேண்டும். நத்தம் பேரூராட்சி பகுதியில் அருகே உள்ளது ந.அய்யாபட்டி குளம். இந்த குளம் நிறைந்தால் அதனை சுற்றிய பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் போர் வெல்கள், கிணறுகள் உள்ளிட்டவைகளில் தண்ணீர் பெருகும்.சுற்று கிராமங்களில் குடிதண்ணீர் பிரச்னையும் இருக்காது. ஆனால் தற்போது ந.அய்யாபட்டி குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குளத்தின் பரப்பளவில் 90 சதவீதம் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன.இதன் கரையில் இருந்து பார்த்தால் அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது. குளத்திற்கு வரும் நீரும் கருவேலமரங்களால் குறைந்த நாளிலே வறண்டு காணப்படுகிறது. இதனை தடுக்க கருவேல மரங்களை அகற்றி குளத்தை துார்வார வேண்டும். பெரும் உதவியாக இருக்கும் வெ.சிவசங்கரன், விவசாயி, ஆவிச்சிபட்டி: நத்தம் பேரூராட்சி பகுதியை சுற்றிய விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் ந.அய்யாபட்டி குளம் தற்போது சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பால் காடு போல் காட்சி அளிக்கிறது. குளத்தில் தேங்கும் தண்ணீரை சீமை கருவேலமரங்கள் உறிஞ்சி விடுகின்றன.இதனால் போதுமான மழை இப்பகுதியில் பெய்தும் குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க வழி இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களைக் கொண்டு குளத்தை சுத்தம் செய்தால் நீராதாரத்திற்கும் விவசாயிகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும். விவசாயத்தை காக்க வேண்டும் செல்வம், விவசாயி, பண்ணியாமலை: ந.அய்யாபட்டி குளம் நிறைந்தால் நத்தம் டவுன் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. செடிகள் ஆக்கிரமித்துள்ளன. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததே இதற்கு காரணம். அதிகாரிகளின் அலட்சியத்தால் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பின் பிடியில் குளம் உள்ளது. எங்களை போன்ற விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.ந.அய்யாபட்டி குளம் மட்டுமன்றி பெரும்பாலான குளங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. விவசாயத்தை காக்க குளங்களை சீரமைத்து தண்ணீரை தேக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை