உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்பு

ரோட்டோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு மீட்பு

பழனி: பழனியில், ரோட்டோரத்தில் பச்சிளம் பெண் சிசுவை வீசிச் சென்றவரை போலீசார் தேடுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டம், பழனி -- கோவை சாலை சண்முக நதி, பனையடி பகுதியில், ரோட்டோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசுவை போலீசார் மீட்டனர். புளியமரத்தடியில் குழந்தை அழும் சத்தம் கேட்டு, பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர்.அங்கு, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை பிளாஸ்டிக் கவரில் கிடந்துள்ளது. தகவல் கிடைத்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தை யாருடையது என, பழனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ