ஊர்க்காவல் படை பெண்களுக்கு ஆபாச படம்;முன்னாள் வீரர் கைது
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஊர்காவல்படையை சேர்ந்த 7 பெண்களுக்கு ஆபாச படம் அனுப்பிய முன்னாள் ஊர் காவல்படை வீரரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்24. இவர் 4 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் ஊர்காவல் படை வீரராக பணியாற்றினர். அதன்பின் வேலைக்கு வராமல் தற்போது டிரைவராக பணியாற்றுகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் தமிழ்வாணன்,முன்பு தன்னுடன் ஊர்காவல் படையில் பணியாற்றிய 7 பெண்களின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச புகைபடம்,வீடியோக்களை அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி,எஸ்.ஐ.,வனிதா தலைமையிலான போலீசார் நேற்று தன் வீட்டில் பதுங்கியிருந்த தமிழ்வாணனை,கைது செய்து சிறையில் அடைத்தனர்.