தீயில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
கீரனூர் : பழநி நரிக்கல்பட்டி அருகே பணத்தோட்டம் நெசவாளர் காலனி அருகே உள்ள தோட்டத்தில் கொட்டப்பட்ட குப்பைக்கு ராமசாமி 85 என்பவர் தீ வைத்தார். அருகில் உள்ள தோட்டத்தில் இருந்த கரும்பு சோகைகள் தீப்பற்றி எரிந்தன. அதனை அணைக்கச் சென்ற ராமசாமி தீயில் சிக்கி உயிரிழந்தார். தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சேதமடைந்தன. கீரனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.