த.வெ.க., வில் இணைய ஓ.பி.எஸ்., அணி தீர்மானம்
வேடசந்துார்: ஓ.பி.எஸ்., உரிமை மீட்பு கழக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வேடசந்துாரில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் ப.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து பணியாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. நிர்வாகிகள் கார்த்திகேயன், கந்தவேல், ராஜாங்கம், முனியாண்டி, மோகன்வீரக்குமார், வீரப்பன், முனியப்பன் வள்ளி துர்க்கீஸ்வரன், காஜாமைதீன், மேனகாசெந்தில் பங்கேற்றனர்.