உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

மரத்தில் மோதிய தனியார் பஸ்; 21 பேர் காயம்

சாணார்பட்டி: சாணார்பட்டி வி.எஸ்.கோட்டையில் இருந்து திண்டுக்கல்லுக்கு தினசரி தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 30க்கு மேற்பட்ட பயணிகளுடன் திண்டுக்கல் சென்ற பஸ்சை அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த மனோகரன் 30,ஓட்டினார். கண்டக்டராக வேலாயுதம்பட்டியை சேர்ந்த அன்பு 40, இருந்தார். பஸ் வி.குரும்பபட்டி அருகே- வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தென்னை மரத்தில் மோதியது. பஸ் முன்பக்க - கண்ணாடி நொறுங்கியது. இதில் கல்லுாரி மாணவி யோகப்பிரியா 19, பள்ளி மாணவிகள் சாதனா 12, ரஞ்சனி 13, மற்றும் சபீனாபேகம் 30, சரஸ்வதி 38, செல்வி 45, நித்தீஸ்வரி உட்பட 21 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ