ரோடு புதுப்பிக்க மறியல்
எரியோடு: இ.சித்துார் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டிக்கு வடமதுரை - ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் இருந்து 1.60 கி.மீ., துார ரோடு உள்ளது. இந்த ரோடு சேதமாகி போக்குவரத்துக்கு சிரமம் தருகிறது. இப்பகுதிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பஸ் சேவை, ரோடு புதுப்பிக்க கோரி கிராம மக்கள் மறியல் நடத்தினர். எரியோடு போலீசார் பேச்சுவார்த்தை பின் கைவிட்டனர்.