பெண்ணின் இறப்பில் சந்தேகம் உடலை வாங்க மறுத்து மறியல்
திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. ஆட்டோ டிரைவராக உள்ளார். இவரது மனைவி கல்யாணி 40.இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தோட்டத்தில் இரு மகன்களுடன் கல்யாணி தங்கி பணிபுரிந்தார். இவருக்கும் தோட்ட உரிமையாளருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ஏப். 23ல் கல்யாணி இறந்து கிடந்தார்.இவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்த கல்யாணியின் உறவினர்கள் , திருச்சி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வடக்கு போலீசார் பேச்சு வார்த்தை பின் கலைந்து சென்றனர்.