ரேபிஸ் தடுப்பூசி முகாம்
பழநி : பழநி நகராட்சி சார்பில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை, கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து வெறி நாய் கடி, ரேபிஸ் நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊர்திகள் மூலம் தெரு நாய்களுக்கும் ஊசிகள் வழங்கப்பட்டன. கால்நடை மருத்துவ உதவி இயக்குனர் சுரேஷ், நகர் நல அலுவலர் மனோஜ் குமார் கலந்து கொண்டனர்.