உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குடிநீர் கேட்டு ரோடு மறியல்

குடிநீர் கேட்டு ரோடு மறியல்

நத்தம்: -நத்தம் கோட்டையூர் ஊராட்சியில் உள்ள ஆண்டிபுரம் கிராமத்தில் 50-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் 3 மாதமாக இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை நத்தம்- கோட்டையூர் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்து காலி குடங்களுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினர்,போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை