உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பள்ளி மாணவர்கள் மறியல்-

பள்ளி மாணவர்கள் மறியல்-

செந்துறை : செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்று கிராம பகுதிகளில் உள்ள ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு செல்ல கூடுதல் பஸ்வசதி கேட்டு ஆக. 26 ல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நத்தத்தில் இருந்து கோட்டைப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் இயக்கபட்டது. இதை பிள்ளையார்நத்தம் வரை இயக்க வலியுறுத்தி அப்பகுதி மாணவர்கள் நேற்று கோட்டைப்பட்டி- பிள்ளையார்நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நத்தம் போலீசார், வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிள்ளையார்நத்தத்திற்கு பஸ்சென்று வர நடவடிக்கை எடுக்கபடும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை