உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் காயம்

ஆட்டோ கவிழ்ந்து மாணவர்கள் காயம்

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து தனியார் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் காயம் அடைந்தனர்.சித்தரேவு, கதிர்நாயக்கன்பட்டி, நெல்லுார் கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் பட்டிவீரன்பட்டி தனியார் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற போது கவிழ்ந்ததில் மாணவர்கள் வேல்முருகன், விஷால், கமலேஷ் கண்ணன், மனோ பிரசாத், தமிழ்ச்செல்வன், பிரவீன்,ஆட்டோ டிரைவர் பிரபு காயமடைந்தனர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை