படிக்கட்டில் மாணவிகள்;பஸ்கள் பறிமுதல்
திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் எம்.வி.எம்.,கல்லுாரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே அளவுக்கு அதிகமான பயணிகளுடன் படிக்கட்டுகளில் கல்லுாரி மாணவிகள் தொங்கியப்படி பயணம் செய்தனர். இதற்கு அனுமதித்த 6 மினி பஸ்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.