உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாதி எரிந்த நிலையில் இளம்பெண் உடல்

பாதி எரிந்த நிலையில் இளம்பெண் உடல்

நத்தம் : -நத்தம் அருகே செல்லப்பநாயக்கன்பட்டியில் பொது மயானத்தில் 25 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையிலும், நெற்றியில் காசு வைக்கப்பட்டு ரோஜா பூ மாலையுடனும். நாக்கு கடிக்கபட்ட நிலையில் கிடந்தார்.அவ்வழியாக ஆடுமேய்க்க சென்றவர்கள் பார்த்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட போலீசார் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் எரித்து கொலை செய்யப்பட்டரா? தானே தீ வைத்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
டிச 14, 2024 05:55

ஏதே தானே தீ வைத்துக் கொள்ளும் பொழுது நெற்றியில் வைத்த காசும் ரோஜா பூ மாலையும் அப்படியே இருக்குமா? என்ன திமிங்கிலம் இது?


சமீபத்திய செய்தி