மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
13-Sep-2025
தேய்பிறை சஷ்டி
14-Sep-2025
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அலங்காரம், அபிேஷகம் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலுள்ள ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தன. ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலுள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின் தீபாராதணை நடைபெற்றது. கந்தக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி, என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், மேட்டுராஜக்காபட்டி சுப்ரமணிய சுவாமி, குள்ளனம்பட்டி சுப்பிரமணியசுவாமி, உள்ளிட்ட முருகன் கோயில்களில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தது. -நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருக பெருமானுக்கு பால்,பழம், பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ச ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேம்பார்பட்டி பாலமுருகன் கோயில்,நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதியிலும் சஷ்டி பூஜை நடந்தது. கன்னிவாடி : தருமத்துப்பட்டி அருகே தோணிமலை முருகன் கோயிலில், பால் அபிஷேகம் செய்யப்பட்டு, விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி , செம்பட்டி கோதண்டராம விநாயகர் , சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில்களில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
13-Sep-2025
14-Sep-2025