உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் நிலத்தை அபகரிக்க முயன்ற மூவர் கைது

கொடை யில் நிலத்தை அபகரிக்க முயன்ற மூவர் கைது

கொடைக்கானல்:கொடைக்கானலில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்களுடன் நிலத்தை அபகரிக்க முயன்ற மூவரை போலீசார் கைது செய்தனர் .கொடைக்கானல் வில்பட்டி பகுதியில் தனியார் லே அவுட்டில் 6 ஆயிரம் சதுரடிக்கு மேல் உள்ள காலி மனையிடம் சிங்கப்பூரில் வசிக்கும் ராமசந்திரன் பெயரில் உள்ளது. இது தற்போது மதுரையில் வசிக்கும் ராமச்சந்திரன் வசம் இருப்பதாகவும், அதை மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரனுக்கு கிரையம் கொடுக்க நேற்று முன்தினம் ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. கொடைக்கானல் சார் பதிவாளர் ராஜேஷ் பிரபு ஆவணங்களை சரி பார்த்தபோது ஆதார் கார்டில் ராமசந்திரனுக்கு பதிலாக ஜானகிராமன் என இருந்தது. உடன் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சொத்தின் உரிமையாளராக கூறப்படும் ராமச்சந்திரன் , உடன் வந்தவர்கள் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரிக்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த ஜானகிராமன் 70, சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜெயக்குமார் 54, சென்னை காமராஜர் நகரை சேர்ந்த நித்தியானந்தந்தை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை